அதிர்ச்சி... பள்ளியின் 2வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்!

கரூர் மாவட்டத்தில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர் ராஜேஷ் கண்ணா. ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களது மகள் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பள்ளிக்குச் சென்ற சிறுமி, மதியம் சுமார் 3.30 மணியளவில் பள்ளியின் 2வது மாடியில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாணவி 2வது மாடியில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். மாணவிக்கு இடுப்புக்கு கீழ் பகுதி செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!