பெண் குழந்தைகளுக்கு வரதட்சணை தராதீங்க... குஷ்பு பேட்டி!

 
குஷ்பூ


இன்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு வரதட்சணை தராதீங்க என்று பேசினார். மேலும் பேசிய அவர், “லாக் அப் உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு எந்தளவு சீர்குலைவு ஆகி வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

குஷ்பூ

பொது மக்களுக்கு போலீசார் தரும் தொந்தரவுகளை முதலமைச்சர் நேரடியாக பார்க்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு முதலமைச்சர் கீழ் தான் வரும். சிபிஐக்கு வழக்கை மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.ஏன் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இது திமுக அரசின் தோல்வியை தான் காட்டுகிறது. இதற்கு முதலமைச்சர் தான் பொறுப்பு ஏற்று பதில் சொல்ல வேண்டும்.  

தமிழ்நாட்டில் லாக் அப் மரணங்கள் மட்டுமில்லாமல் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் தவ்று தான். பெண் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் வரதட்சனை கொடுக்க் வேண்டாம். வரதட்சணை வாங்க வில்லை என்றாலும் ஆசையாக பொருட்கள் தர வேண்டாம் என பெற்றோர்களுக்கு கூறுகிறேன்.

பெண்ணிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு பெண்ணை கட்டி தராதீர்கள். 2 பெண் குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் எப்போதும் என்னுடைய குழந்தைகளாக இருப்பார்கள். அதன் பிற்கு தான் கணவருக்கு மனைவி. ஒரு பிரச்சனை என்றால் வாய் திறந்து பேசுங்கள். லாக் அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமை போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

குஷ்பூ

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் முதலமைச்சர்  என்ன செய்து கொண்டு இருக்கிறார்.  போதை பொருள் விவகாரத்தை சினிமா துறையில் மட்டும் கூற  முடியாது. பள்ளி, கல்லூரி உள்பட எல்லா இடத்திலும் போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது. சினிமாவில் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் உடனே அதிகமாகி விட்டது என்பதா எத்தனை பேர் கைதாகி உள்ளனர். 

சினிமாவில் நடிப்பதால் சூப்பர் ஹீரோ கிடைக்காது. சராசரி மனிதர்கள் தான் அவர்களுக்கும் போதை பழக்க்ம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி தடுக்க வேண்டும் என்ற வழியை பார்க்க வேண்டும். ஆனால் பிரச்சனைகளை தீர்க்க வழி பார்க்காமல் பூதக்கண்ணாடி வைத்து பெரிசாக்க கூடாது. கொக்கைன், கஞ்சா மட்டும் கிடையாது ஊசி முலமும் போதை உட்கொள்ளும் நிலை இருக்கிறது. போதைக்கு அடிமையவர் எப்படி மீட்பது என்ற வழியை பார்க்க வேண்டும். ஏற்கெனவே போதை பொருள் விவகாரத்தில் திமுக பின் வாங்கியது. சினிமாவை மட்டும் சொல்ல கூடாது” என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது