சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்.. 26 வயதில் 4 குழந்தைகளுக்கு அப்பாவான இளைஞர் கைது !!

 
மனைவி

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே செயல்படும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல வேலைக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடினர்.

மனைவி

எங்கு தேடியும் கிடைக்காததால், சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது லெவஞ்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவருடன் சிறுமியுடன் நின்றிருந்தார். பின்னர் இரண்டுபேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சிறுமியுடன் பிடிபட்ட இளைஞர், நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (26) என்பதும், தற்போது கலந்தபனை காற்றாடிவிளையில் வசித்து வருவதும் தெரியவந்தது. சிறுமியை, காதலிப்பதாக கூறி காட்டு பகுதிக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது. 

மனைவி

இதையடுத்து, இசக்கிமுத்து மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். இசக்கிமுத்து, அந்த சிறுமியின் நெருங்கிய உறவினர் என்பதும், ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web