இளம்பெண்ணை கடத்தி மதுவை வாயில் ஊற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை !

 
குமார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள விகார பாத் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்று வரும்போது ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமித் குமார் சர்மா (33) என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினமும் இளம்பெண் வேலைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சுபம் சர்மா (29) என்பவருடன்சுமித் குமார் சர்மா காரில் சென்று பேசியுள்ளார். அப்பெண் புறக்கணித்துவிட்டு நடந்துசென்றபோது, வலுக்கட்டாயமாக காரில் இழுத்து போட்டுக் கொண்டு கடத்திச்சென்றார்.

குமார்

பின்னர் இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று வாயில் மதுவை ஊற்றினர். இதனால் இளம்பெண் மயக்கம் அடைந்தார். எனினும் இரக்கம் காட்டாத இருவரும் அங்கேயே வைத்து  இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர் அணிந்து இருந்த 24 கிராம் தங்க நகையை பறித்துக் கொண்டு காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றனர். இதில் அவர் காயமடைந்தார்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்துசென்ற அப்பெண் இது குறித்து போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கார் டிரைவர் சுபம் சர்மா மற்றும் சுமித் குமார் சர்மா ஆகியோர் தான் என்பதை உறுதி செய்து, பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமார்

புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளைகளிடம் இருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web