துடிதுடிக்க 36 இடங்களில் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவன்! பகீர் வாக்குமூலம்!

 
பவித்ரா


 திருப்பூர் மாவட்டம்,   கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4வது வீதியில் வசித்து வருபவர் 36 வயது மணிகண்டன்.   இவரது சொந்த ஊர் மதுரை. இவர், திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி 23 வயது பவித்ரா.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2வது மனைவி. இதே போல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர் தான்.  திருமணத்திற்கு பிறகு சில காலம் இருவரும் ஒற்றுமையாக   குடும்பம் நடத்தி வந்தனர்.இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  பவித்ரா அவரது தாய் சரஸ்வதியுடன் அடிக்கடி மொபைலில்  பேசிக்கொண்டே இருந்தார்.

பவித்ரா

மணிகண்டன் மாமியாருடன்   பேசக்கூடாது என மனைவியை கண்டித்துள்ளார். மனைவி அதனை கேட்காமல் தொடர்ந்து பேசி வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நேரம் வாக்குவாதம் முற்றியது. 3 வது மாடியில் வசித்து வரும் இவர்களிடையே ஜுலை 1ம் தேதி இரவு   இது குறித்து  மீண்டும் தகராறு ஏற்பட்டது.  மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டி துண்டித்தார். சத்தம் கேட்டு கீழ் வீட்டில் வசித்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது, மனைவியை அரிவாளால் வெட்டிகொலைசெய்து விட்டதாக மணிகண்டன் கூறினார்.  இக்கொடூர சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மணிகண்டனை கைது செய்தனர்.

போலீஸ்

பவித்ராவின் தலையையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். பவித்ராவின் தலையில்  16 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. உடலிலும் சராமாரியாக வெட்டுக்காயம் இருந்தது.உடலின் பல இடங்களில் வெட்டினார். தலை பகுதியில் மட்டும், 16 இடங்களில் வெட்டு உள்ளது. உடலில், 20 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. தலையை எடுத்து சாக்குப்பையில் போட்டு வைத்துள்ளார்.   இது குறித்து மணிகண்டனிடம் தீவிர விசாரனை மேற்கொள்ளப்பட்டதில் திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில்  பவித்ராவின் தாயாரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசக்கூடாது என பவித்ராவை பலமுறை எச்சரித்து வந்தேன். அதை மனைவி கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து பேச்சை மீறி வந்த ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன்.    தலையை பூக்கூடையில் வைத்து தப்பி ஓட நினைத்தேன். அதற்குள் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். இதனால் வசமாக  சிக்கிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web