மே 14ல் கூத்தாண்டவர் கோயில் அரவான் தேரோட்டம்!

கூத்தாண்டவர் கோயிலில் மே 14ம் தேதி அரவான் தேரோட்டம் நடைபெற உள்ளது. கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு மே 13ம் தேதி நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிய நிலையில், நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மே 13ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும், 14ம் தேதி சித்திரை தேரோட்டமும் (அரவான் தேரோட்டமும்) நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு நினைத்த காரியங்கள் கைகூட நேர்த்திக்கடன் செலுத்துவர்.மே 13ம் தேதி இரவு திருநங்கைகள், அரவானை கணவனாக நினைத்து தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பூசாரிகளிடம் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள், சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கோவில் வளாகத்தில் ஆடிப்பாடி கும்மியடித்து சந்தோஷமாக கலந்துஇருப்பார்கள். மறுநாள் அரவான் தேரோட்டம் நடைபெறுகிறது. அழிகளம் நோக்கி தேர் செல்லும் போது திருநங்கைகள் கணவனை (அரவான்) நினைத்து ஒப்பாரி வைத்தபடி பின்தொடர்ந்து செல்வார்கள்.
அழிகளத்திற்கு தேர் சென்றடைந்ததும், அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்தும், குங்குமத்தை அழித்தும் ஒப்பாரி வைப்பார்கள். பின்னர் பூசாரி கையால் தாலியை அகற்றிவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குளித்து வெள்ளை புடவை அணிந்து விதவைக் கோலத்துடன் புறப்பட்டுச் செல்வர். இந்நிகழ்வைத் தொடர்ந்து மே 15ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!