168 பேரை கைது செய்த கோவை தனபாலனுக்கு போதை ஒழிப்பு விருது !

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணிபுரிந்த 15 போலீஸ் காவலர்களுக்கு தமிழக முதல்வரின் "போதை ஒழிப்பு விருது" அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தனபாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தனபாலன் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 55 வழக்குகளில் 169 பேரை கைது செய்துள்ளார்.
இந்த வழக்குகளில் 161.4 கிலோ கஞ்சா, 77 கிராம் மெத்தபெட்டமைன், 4.12 டன் குட்கா பொருட்கள், 29 இரு சக்கர வாகனங்கள், 5 கார்கள் பறிமுதல் செய்துள்ளார். விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு ஆகஸ்ட் 15 ம் தேதி சென்னையில் முதலமைச்சர் கையால் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!