ஜூலை 7ல் திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம்.. யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்!

 
திருச்செந்தூர் கோயில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை யாகசாலை பூமி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்செந்தூர் கோயில்

இது போல, அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. வரும் ஜூலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் ராஜகோபுரம் அருகே யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

முன்னதாக அறநிலையத்துறை ஆகம வல்லுநர் குழுவை சேர்ந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுநர் குழுவை சேர்ந்த செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் மற்றும் பூமி பூஜைகள் செய்தனர். பின்னர் யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் நடப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது