திருமா நெகிழ்ச்சி!! ஈபிஎஸ் க்கு தலைவராக வாழ்த்து!!
அதிமுகவில் நிலவி வந்த குழப்பத்துக்கு இன்று ஓரளவு தீர்வு கிடைத்துவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்து, எடப்பாடி பழனிசாமிக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. அதாவது, அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவில் கூறியுள்ளது.
தீர்ப்பு வெளியானது முதல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் அரசியல் தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’ என தெரிவித்துள்ளார்.
அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 23, 2023
அவருக்கு எமது வாழ்த்துகள்.
இவ்வாய்ப்பு மீண்டும்
பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.#ADMK pic.twitter.com/0bpB5Juw4e
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க