நிதி பற்றாக்குறை... டிச.16ல் ஏலம்... ₹5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடும் தமிழக அரசு!
நிதிபற்றாக்குறை என்பதால், தனது நிதித் தேவைகளுக்காக தமிழக அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஏலத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடத்த உள்ளது.

தமிழக அரசு விற்பனை செய்ய இருக்கும் பிணையப் பத்திரங்களின் கால அளவு மற்றும் மதிப்பு பின்வருமாறு:
4 ஆண்டுக்காலப் பத்திரம்: ரூ. 1,000 கோடி
7 ஆண்டுக்காலப் பத்திரம்: ரூ. 1,000 கோடி
10 ஆண்டுக்காலப் பத்திரம்: ரூ. 1,000 கோடி
11 ஆண்டுக்காலப் பத்திரம்: ரூ. 1,000 கோடி
30 ஆண்டுக்காலப் பத்திரம்: ரூ. 1,000 கோடி
ஏலம் நடைபெறும் நாள்: டிசம்பர் 16, 2025
இடம்: மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகம்.

சமர்ப்பிக்கும் முறை: ஏலக் கேட்புகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (E-Kuber) மின்னணு வடிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் நடைபெறும் என்றும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
