பெண்களே... உஷார்! கேபிள் ஒயரில் துணி காய வைத்த இளம்பெண் மின்சாரம் தாக்கி மரணம்!
நம்மில் புறா கூண்டு போன்று அபார்ட்மெண்ட் வீடுகளில் வசிப்பவர்கள் தான் அதிகம். இவர்களுக்கு இருக்கும் பொதுவான வசதி மொட்டை மாடியில் துணி காய வைப்பது. வழக்கமாக தினமும் காய வைப்பது தானே என்று அலட்சியமாக இருக்காதீங்க பெண்களே... இப்படி திருவள்ளூர் அருகே துணி காய வைத்த போது மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரைச் சேர்ந்தவர் நாகராஜ். அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறது. இவரது மனைவி கீர்த்தனா(30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கீர்த்தனா, வழக்கம் போல் வீட்டில் துணிகளை துவைத்து விட்டு, துணிகளை காய வைப்பதற்காக சுவர் ஓரம் இருந்த கேபிள் டிவி ஒயரை ஈரக்கையுடன் பிடித்துள்ளார். அப்போது அதிலிருந்து கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் வந்தவர்கள் கீர்த்தனாவை பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!