நாளை 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி... முதல்வர் தொடங்கி வைப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” என்ற புதிய திட்டத்தை நாளை (ஜன. 5) தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில்துறைப் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இரண்டு கட்டங்களாக 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் முதல் கட்டம் தொடங்குகிறது. மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் டிஜிட்டல் திறனை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் Intel i3 அல்லது AMD Ryzen 3 செயலி, 8GB RAM, 256GB SSD நினைவகம், Windows 11 மற்றும் BOSS Linux ஆகியவை உள்ளன. மேலும் MS Office 365 மற்றும் Perplexity Pro செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் ஆறு மாத சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கல்வி வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பு, வருமான உயர்வு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
