இந்தியை கற்றுக் கொண்டால் வாழ்வாதாரம் மேம்படும்... சந்திரபாபு நாயுடு அதிரடி!

மத்திய அரசு நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து “ மொழி என்பது தொடர்பு கொள்ள மட்டுமே உதவும். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் உலக அளவில் ஒளிர்ந்து வருகிறது.
ஆந்திராவை பொறுத்தவரை இங்குள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 10 சர்வதேச மொழிகளை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியை கற்றுக் கொண்டால் மக்களுடன் பழக எளிதாக இருக்கும். வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆங்கிலத்தையும், தெலுங்கையும் தங்கள் அரசு ஊக்குவிக்கும்” என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!