தெருநாய்கள் கடித்து சிறுவன் படுகாயம்..!! தொடரும் சோகம்!!

 
ஜாபர்

கர்நாடகா மாநிலம் கோலார் டவுன் ரகமத் நகரை சேர்ந்த ஜாபர் (9) என்ற சிறுவன், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திடீரென தெருநாய்கள் கூட்டமாக வந்துள்ளன. திடீரென்று அந்த தெருநாய்கள் ஜாபரை பார்த்து குரைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாபர், அங்கிருந்து ஓட முயன்றான்.

ஜாபர்

ஆனாலும் விடாத தெருநாய்கள் சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கதறின. இதனால் வலியால் ஜாபர் கதறி துடித்தான். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், சிறுவனை நாய்கள் கடித்து குதறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து தெருநாய்களை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர். 

ஆனால் சிறுவனின் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் உயிருக்கு போராடினான். இதனால் போலீசார் அவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் ஜாபர் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே தெருநாய் கடித்து குதறி சிறுவன் ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி அறிந்ததும், அவனது பெற்றோர் விரைந்து வந்தனர்.

ஜாபர்

மேலும், சிறுவன் ஜாபரை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web