அதிர்ச்சி!! ஆற்றில் மூழ்கி சிறுமி பலி!! குளிக்க சென்றபோது சோகம்!!

 
சுலைகா

 மழை பெய்து ஆறு, குளங்களில் நீர் வந்தாலே பள்ளிப் பிள்ளைகளின் ஆட்டம் தாங்கமுடியவில்லை. வீட்டில் பெற்றோரிடம் நச்சரித்தோ நண்பர்களுடன் சேர்ந்தோ ஆறு குளங்களில் குதித்து ஆட்டம் போடுகின்றனர்.சில நேரங்களில் விபரீதமாக முடிந்து விடுகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடி பகுதியில் வசித்து வருபவர் முகமது சுலைமான்.

இவரது மகள் 4 வயது சுகைரா . இவர் நேற்று பிற்பகல் தனது மோட்டார் சைக்கிளில் முகமது சுலைமான் மகளை அழைத்து கொண்டு நீடாமங்கலம் அருகே தண்டாலம் பாலம் வடக்கு பகுதியில் உள்ள கோரையாற்றில் குளிப்பதற்காக சென்றார். 

water

பின்னர் ஆற்றில் முகமது சுலைமான் குளிக்க சென்றார். அப்போது கரையில் சுகைரா அமர்ந்து இருந்தார். பின்னர் சுகைராவும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கோரையாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது. ஆற்றில் மூழ்கிய சுகைரா அடித்து செல்லப்பட்டார். மகளை காணாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் தேவங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் தேவங்குடி போலீசார் மற்றும் கூத்தாநல்லூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் ஆற்றில் இறங்கி சிறுமியை தேடினர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

Police

இதனால் கோரையாறு தலைப்பில் உள்ள அணையை அடைத்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆற்றில் மூழ்கிய நிலையில் சுகைரா உடல் மீட்கப்பட்டது. பின்னர் சிறுமி உடல் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web