நாளை திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!
நாளை அய்யா வைகுண்டர் சாமி அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகைகள், உள்ளூர் திருவிழாக்கள் ஆகியவற்றைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர் பொதுவிடுமுறையைத் தவிர்த்து அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை மார்ச் மாதம் 4ம் தேதி சனிக்கிழமை நெல்லை மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியா் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு சனிக்கிழமை மார்ச் 4ம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. அவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்காக மாவட்ட கருவூலங்கள் குறைவான பணியாளர்களை கொண்டு வழக்கம் போல் செயல்படும் என அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க