அடுத்தடுத்து 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மே 7ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய நாளில் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். குறிப்பிட்ட தினத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 24ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் கோவில் திருவிழாவுக்காக மே 15ம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்காக மே 22ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!