மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை ... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அந்த நாளில் விடுமுறை வழங்கப்படும். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
