நெகிழ்ச்சி... தந்தையைப் போலவே ராதாகிருஷ்ணன் மகனும் ஐஏஎஸ்!

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் 2024 யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளின் படி அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தத் தேர்வில் 57 பேர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இந்த பட்டியலில் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் தனது முதல் முயற்சியிலேயே 80-வது ரேங்க் பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளார். 27 வயதான அரவிந்த், மருத்துவ அறிவியலை தனது விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். தற்போது அவர் பொது மருத்துவத்தில் முதுகலைப் படிப்பின் இறுதியாண்டு தேர்வை எழுதி முடித்துள்ளார் .
தனது வெற்றி குறித்து பேசிய அரவிந்த், "நான் செய்தித்தாள்களின் தலையங்கப் பகுதிகளைத் தவறாமல் படிப்பேன். அதுதான் எனது இந்தத் தேர்வுக்கான முதுகெலும்பாக இருந்தது," எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அரவிந்த் ராதாகிருஷ்ணன் 2022ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்விலும் வெற்றி பெற்று 361வது இடத்தைப் பிடித்திருந்தார். இருப்பினும், அப்போது அவர் பணியில் சேரவில்லை. விடாமுயற்சியுடன் மீண்டும் 2024ம் ஆண்டுக்கான தேர்வில் பங்கேற்று தற்போது தேசிய அளவில் 80வது இடத்தைப் பெற்று தனது இலக்கை அடைந்துள்ளார்.
மருத்துவப் படிப்பை முடித்த கையோடு இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தமிழகத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர்த்த அரவிந்த் ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!