வாழை விவசாயத்தில் நஷ்டம்... விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

 
விஷம்

சாத்தான்குளம் அருகே வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளத்தை சேர்ந்த நல்லகண்ணு மகன் பரமசிவன் (44). விவசாயி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான 4½ ஏக்கரில் வாழை பயிரிட்டு பயிரிட்டுள்ளார். அப்பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். 

சூறாவளி காற்று... கனமழை... லட்சக்கணக்கில் வாழை மரங்கள் சேதம்!

ஆனால் அந்த கிணற்றில் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையாம். தொடர்ந்து 2-வது ஆழ்துளை கிணறு அமைத்தாராம். அதிலும் போதிய தண்ணீர் இல்லையாம். இந்நிலையில் கிடைத்த தண்ணீரை கொண்டு வாழை தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். இதில் ஓரளவு பயன்கிடைத்து, வாழை அறுவடைக்கு தயாராகியுள்ளது. வாழைத்தார்களை அறுவடை செய்துவிற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வாழைத்தார்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லையாம். 

வாழை மரம்

ஏற்கனவே, 2 ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காத நிலையில், அறுவடை செய்த வாழைத்தார்களுக்கும் போதிய விலை கிடைக்காததால், கடுமையான நஷ்டத்தை சந்தித்த அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாமல் நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ராதா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது