பங்குச்சந்தையில் நஷ்டம்... மகனுடன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தற்கொலை!

சவுகார் பஜார் பகுதியில் வசித்து வந்த விபுல் பிரஜாபதி, அவரது மனைவி சரிதா மற்றும் 12 வயது மகன் வ்ரஜ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை இரவு சூரத் நகரில் உள்ள கால்தேஷ்வர் கோவிலுக்கு சென்று அருகிலுள்ள தபி நதியில் பாய்ந்துள்ளனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இந்த தற்கொலை சம்பவத்திற்கு பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. மனைவி சரிதா மனநலம் தொடர்பான சிகிச்சையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து காம்ரேஜ் போலீஸ் நிலைய ஆய்வாளர் ஏ.டி. சாவ்டா , “வெள்ளிக்கிழமை காலை ஒரு வழிப்போக்கர், சடலத்தைப் பார்த்து எங்களைத் தொடர்பு கொண்டார். இதன் பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன” என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!