பணி மாறுதலில் சென்ற காதலர்... நாகையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

 
கவிப்ரியா

திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்தவர் கவிப்பிரியா (27). இவர் நாகை மாவட்டத்தில் காவல் துறையில் ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம் போல மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக, அவர் தங்கியிருந்த காவலர்  குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் கவிப்பிரியா மீண்டும் பணிக்கு வரவில்லை. 

கவிப்பிரியா

மதிய உணவு வேளைக்குச் சென்ற கவிப்பிரியா நீண்ட நேரமாகியும் பணிக்கு திரும்பாததால், சந்தேகம் அடைந்த சக போலீசார் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவர் செல்போனை எடுக்காததாலும், இரவு நேரம் வரையில் கவிப்பிரியாவிடம் இருந்து மீண்டும் போன் அழைப்பு வராததாலும், அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுப் பார்த்தனர். அப்போது, கவிப்பிரியா தங்கியிருந்த அறைக் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. வேறு வழியில்லாமல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில், சடலமாக கவிப்பிரியா தொங்கிக் கொண்டிருந்தார். 

இதனை கண்டு சக போலீசார் பெரும் அதிர்சசி அடைந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். 

கவிப்பிரியா

ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் கவிப்பிரியா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவருடன் பணிபுரிந்த சக பெண் காவலர்களிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலைச் செய்து கொண்ட பெண் காவலர் கவிப்பிரியாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் ஆய்வு அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என போலீசார்  கூறினர். கவிப்பிரியா, காவல் துறையில் பணிபுரிந்து வரும் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அவர் பணி மாறுதலில் சென்று விட்டதால், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web