தமிழ் ஒளியின் வெளிச்சம் பரப்பிய கவிஞர் சஞ்சீவி காலமானார்!!

 
சஞ்சீவி

 கவிஞர் சஞ்சீவி நேற்று காலமானார். இவருக்கு வயது  94. இவரது மறைவிற்கு இலக்கிய ஆளுமைகள், பிரபலங்கள், கவிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் சஞ்சீவி 1929ல் துரைசாமி - அங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.  8ம்  வகுப்பு வரை மட்டுமே பள்ளிப்பாடம் பயின்ற சஞ்சீவி மிக சின்னஞ்சிறு வயதிலேயே பெரியாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டார். அத்துடன் கம்யூனிஸ்ட் தலைவர் கே. எஸ். பார்த்தசாரதி மீதும் தணியா தாகம் கொண்டு தமிழின் மீது ஆர்வம் வளர்த்தார்.  பாரதிதாசன் கவிதைகள் மூலம் கவிஞர் தமிழ்ஒளியை இனம் கண்டு தமிழின் முதல் தலித் காவியமான வீராயி காவியத்தின் வீரிய கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

தமிழ் ஒளி
இதன் பிறகு கவிஞர் தமிழ் ஒளியிடம் தோழமை நட்புடன் பழகி வந்த நிலையில்  அவரின் அகால மரணம் சஞ்சீவியை பெரும் பாதித்தது.  தமிழ்ஒளியை அவரது கவிதைகளால் வாழவைப்பது என சபதம் செய்து கொண்டார். இதன் பலனாக  தமிழ்ஒளியின் நூல்களை தேடித்தேடி பதிப்பித்தார். டாக்டர் மு. வரதராசனார் , பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார் ஆகியோரிடம் நூல்களுக்கு முன்னுரை பெற்று கவிஞரின் புலமையையும் இலக்கிய ஆளுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.


அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை தமுஎகச, கலை இலக்கிய பெருமன்றம் இவைகளுடன் நடத்திவந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த பெருமுயற்சி கொண்டார்.  தமிழ்ஒளி மீதான ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில்  சாகித்ய அகாடமி அவரது வரலாற்றை சஞ்சீவியைக் கொண்டு எழுதவைத்தது. சஞ்சீவி தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள் என்ற கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தமிழ்ஒளி நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

தமிழ் ஒளி

இந்நிலையில் அவரது புகழ்ஒளி மங்காமல் காத்துவந்த செ. து. சஞ்சீவி இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சீவிக்கு மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.சஞ்சீவியின் கண்கள் தானமாக வழங்கப் பட்டுள்ளன. சஞ்சீவியின் உடல், எண் 48, பிள்ளையார் கோயில் தெரு, (பச்சையப்பன் கல்லூரி அருகே) செனாய் நகர் சென்னை-30 என்ற முகவரியில் பொதுமக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று  பிற்பகல் 3 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாகச் கொண்டு செல்லப்பட்டு நுங்கம்பாக்கம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web