ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jun 16, 2025, 19:35 IST
ஆள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பூவை ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல்துறை பாதுகாப்பில் வைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் ஜூன் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
