நீதிபதிகள் இரங்கல்... சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!

 
சத்திய நாராயணா


 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக காலமானார்.  அவருக்கு வயது 56. சத்திய நாராயண பிரசாத் 4  ஆண்டுகளுக்கு முன்பு 2021ம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.  

சென்னை உயர்நீதிமன்றம்


தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும்  63 நீதிபதிகளில் பணி அனுபவ வரிசையில் அவர் 42-வது இடத்தில் இருந்தார். சத்திய நாராயண பிரசாத் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னதாக, 1997 லிருந்து  24 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றுள்ளார்.

உயர்நீதிமன்றம்


தஞ்சாவூரில் பிறந்தவரான சத்திய நாராயண பிரசாத், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, பிஎஸ்என்எல், சென்னை துறைமுக அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உட்பட பல்வேறு அரசு அமைப்புகளுக்கான ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web