திணறுது மதுரை... குவியும் பக்தர்கள்... மே 12ல் அழகர் ஆற்றில் இறங்குகிறார்!

 
இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்!

மதுரை முழுக்கமே இந்த அக்னி வெய்யிலிலும் பக்தர்கள் கூட்டத்தால திணறுது. திரும்பும் திசையெல்லாம் சித்திரைத் திருவிழாவை சிலாகித்து மகிழ்கிறார்கள் பக்தர்கள். கடந்த ஏப்ரல் 29ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மே 6ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், மே 7ம் தேதி திக் விஜயம், மே 8ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி  திருத்தோரோட்டம் என அடுத்தடுத்து முக்கிய திருவிழாக்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. 

கள்ளழகர்

சித்திரை திருவிழாவின் 4ம் நாள் காலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் வில்லாபுரம் பாகற்காய் மண்டபடியில் எழுந்தருளும் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள், பொதுமக்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்க அழகர் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி ”இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள் தண்ணீரை தோல் பையில் நிரப்பி அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் அடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளழகர்
வாசனை திரவியம், வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை உற்சவர் சிலை மீது பக்தர்கள் பீய்ச்சி அடிக்க வேண்டாம் என்றும், விரதம் இருந்து ஐதீக முறையில் தண்ணீரை பீச்சி அடிக்க பக்தர்கள், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web