வெனிசுலா அதிபர், மனைவி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்.... துணை அதிபர் பரபரப்பு அறிக்கை !
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் இருப்பது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரோ மற்றும் அவரது மனைவி தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார். அதிபர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பால் வெனிசுலாவில் அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பதற்றம் நிலவும் சூழலில், அதிபர் மாயமானது புதிய நெருக்கடியாக மாறியுள்ளது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் விவாதமாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
