மகா சிவராத்திரி... பிப்ரவரி 25ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா!

 
அமித் ஷா
மகா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 25ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா . பிப்ரவரி 25ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமித்ஷா

முன்னதாக கோவையில், மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25 ம் தேதி  கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். ஈஷா மையத்தில் பிப்ரவரி 26 புதன்கிழமை நிஷித கால் பூஜை அல்லது நள்ளிரவு வழிபாட்டுடன் கொண்டாடப்பட இருக்கிறது.

அமித்ஷா

இந்த சிவராத்திரி விழா பிப்ரவரி 26, அதிகாலை 12:09 மணி முதல் பிப்ரவரி 27 அன்று அதிகாலை 12:59 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வருவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. அமித்ஷா வருகையை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள இருக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web