கோர விபத்து.. நேருக்கு நேராக மோதிக் கொண்ட கார்கள்... பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சோகம்!
சென்னை- புதுச்சேரியை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இளைஞர்கள் அவ்வப்போது பைக் சாகசம், பந்தயத்தில் ஈடுபட்டும் விபத்தில் சிக்குவது நடந்து வருகிறது.
சென்னை அடுத்த மாமல்லபுரம் இசிஆர் சாலையில், எதிரெதிர் திசையில் அதிவேகமாக வந்த கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த பயங்கர விபத்தில், ஒரு கார் சாலையில் அப்படியே கவிழ்ந்து அப்பளமாய் நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் பெற்றோருடன் சென்ற பிறந்து 45 நாட்களே ஆன இதேஷ் என்ற ஆண் குழந்தையும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இந்த கோர விபத்தில் 2 வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பிரதான கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!