பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க ... ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை!

 
ஓபிஎஸ்

ஓபிஎஸ் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கல்வி தான் ஒரு மாணவனை முன்னேற்றம் செய்யும் ஆயுதமாகும். அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசியர்கள் இன்று குறைவான சம்பளத்தில் பணிபுரிந்து வரும் நிலை நீடித்து வருகிறது. அந்த வகையில் 2021 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஒவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தது. 

ஓபிஎஸ்

 இது குறித்து திமுக எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடமிருந்து கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், தேர்தல் வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்பதை நிறைவேற்ற தி.மு.க. அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ12,500 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருபவர்களை நிரந்தரம் செய்வது என்பது மிகவும் நியாயமான கோரிக்கை . இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. 

பணி நிரந்தரம் கோரிக்கையினை வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதனை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டபோது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டனர். இதனையடுத்து, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என பகுதி நேர ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. 

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!

தங்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிட வேண்டுமென்று பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமே இதில் அடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் இதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web