போதைப்பொருள் வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது!
கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையின்போது சாக்கோ அங்கிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சி பரவியதை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இது குறித்து நேரில் ஆஜரான அவரிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய பின் போலீசார் கைது செய்தனர்

முன்னதாக நோட்டீஸ் வழங்க நடிகரின் திருச்சூர் வீட்டுக்குப் போலீசார் சென்ற போது, அவர் வீட்டில் இல்லாததால் அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் சாக்கோ, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலில் நடந்த சோதனையின் போது, நடிகர் தப்பிச் சென்றது ஏன் என்பது குறித்து கேட்டறிவதே விசாரணையின் நோக்கம் என்று போலீசார் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், ஷைன் டாம் சாக்கோ மீது ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து ‘சூத்ரவாக்யம்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ‘அம்மா’ ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. வின்சியின் புகார் குறித்து விளக்கம் அளிக்க ஷான் டைம் சாக்கோவுக்கு அந்த குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
