வைரல் வீடியோ... மனைவிக்கு ஆச்சரிய பரிசு ... 2 சாக்குமூட்டை நிறைய காசு கொடுத்து நகை வாங்கி கொடுத்த கணவன்!

 
காசுகள்
 

கான்பூரில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த அபூர்வமான சம்பவம் அங்கிருந்தவர்களை மட்டுமன்றி, சமூக வலைத்தளங்களிலும் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பான் கடை நடத்தும் அபிஷேக் யாதவ் (22), தனது மனைவிக்காக ஆச்சரியமான பரிசு வாங்கும் நோக்கில், ரூ.10 நாணயங்களை ஓராண்டு முழுவதும் சேமித்து வைத்திருந்தார்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண்டு நிறைவடையும் நேரத்தில், பெற்றோரிடம் சென்றிருந்த மனைவிக்கு பரிசளிக்க இது சரியான தருணம் என நினைத்த அபிஷேக், இரண்டு பெரிய சாக்கு மூட்டைகளில் நாணயங்களை எடுத்து நவம்பர் 1 அன்று நகைக்கடைக்குச் சென்றார். அங்கு நாணயங்களை எண்ணியபோது, மொத்தம் 5,290 நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.05 லட்சம் ஆகும்.

அபிஷேக் தேர்வு செய்த தங்கச் சங்கிலியின் விலை ரூ.1.25 லட்சம் என்பதால், மீதி தொகையைத் தவணையாக செலுத்தலாம் என நகைக்கடை உரிமையாளர் அனுமதி வழங்கினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நாணயங்கள் எண்ணப்பட்ட நிலையில், “என் மனைவிக்கு இவ்வளவு விலையுயர்ந்த பரிசு வாங்க முடியும் என நினைத்ததே இல்லை” என்று உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்துள்ளார் அபிஷேக்.மனைவிக்கான அவரது அன்பும் பொறுமையும் சமூக வலைதளங்களில் பெருமளவு பாராட்டைப் பெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!