காதல் மனைவியை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை... மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

 
காதல்

திருநெல்வேலி  மாவட்டத்தில் காதல் மனைவியை அடித்துக் கொன்ற பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி (45). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (34). இவர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஜெயலட்சுமி, தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

கணவன் மனைவி சண்டை

கடந்த 10-1-2022 அன்று ஜெயலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலையாண்டி தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அவா் அங்கு கிடந்த தேங்காய் துருவியை எடுத்து ஜெயலட்சுமியை அடித்தாா். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, ஜான்பிரிட்டோ ஆகியோர் விசாரணை நடத்தி சுடலையாண்டியை கைது செய்தனர்.

கணவன் மனைவி

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சுடலையாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஜி, நீதிமன்றம் போலீஸ் சீதாலட்சுமி மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web