ப்ளீஸ் விட்டுடுங்க... கெஞ்சிய மெய்தி இன இளைஞர் கடத்தி சுட்டுக் கொலை... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையேயான வன்முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து, 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 58,000 மக்கள் மாநிலம் முழுவதும் 351 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த நிலையில், அண்டை மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். பெண்களை நிர்வாணமாக்கி வீதிகளில் எடுத்துச் செல்லும் வீடியோ உலகையே பதறவைத்தது.
சராச்சந்த்பூர் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 38 வயது நபர் மயங்கலம்பம் ரிஷிகாந்தா, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கடத்தல் முன்பு உயிருக்கு மன்றாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி, உள்ளூர்வாசிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அரசாங்க அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் யுனைடெட் குக்கி தேசிய இராணுவம் (UNKA) தொடர்புள்ளதாக சந்தேகம் உள்ள நிலையில், பல குக்கி-சோ ஆயுதக் குழுக்களுடனான SoO ஒப்பந்தத்தின் நடவடிக்கைகள் பாதிக்கபட்டு, மணிப்பூரில் அமைதி இன்னும் வெகுதொலைவில் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
