ஜூன் 23ல் +2 பொதுத்தேர்வு மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

 
தேர்வுகள் இயக்ககம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய  மாணவர்களுக்கு  அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுதி மறுகூட்டல்,  மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்   23.06.2025 (திங்கட் கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  

தேர்வு

மறுகூட்டல்/மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும். மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது