+2 மாணவியுடன் திருமணம்... இளைஞர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு!

 
குழந்தை திருமணம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக வாலிபர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் செல்வகுமாா் (33). சுமை தூக்கும் தொழிலாளி. இவா், தூத்துக்குடி தொ்மல் நகரைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியை பெற்றோரின் அனுமதியின்றி 3 மாதங்களுக்கு முன்பு எப்போதும் வென்றான் பகுதியிலுள்ள கோயிலில் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

பின்னா், நடராஜபுரம் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டில் பெற்றோரின் அனுமதியின்றி அச்சிறுமியுடன் அவா் தங்கியிருந்தாராம். சிறுமி கருவுற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

5வது திருமணம்

இது குறித்து கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், செல்வகுமாா் மீது போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

 

From around the web