காதலனுடன் திருமணம்... மகளின் காலில் விழுந்து கதறிய தாய்!

 
காதல் திருமணம்

மகளின் திருமணத்திற்காக வரன் பார்த்து, நிச்சயம் செய்து, உறவினர்கள், நண்பர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்து கூறிய நிலையில், தனது உறவுக்கார பையனைக் காதலிப்பதாக, அவனைத் திருமணம் செய்துக் கொள்வதற்காக பெற்றோர்கள் பார்த்த வரனை மறுத்து, உறவுக்கார காதலனைத் திருமணம் செய்துகொண்ட மகளைத் தன்னுடன் வருமாறு கூறி, காவல் நிலையத்திலேயே தாய், தனது மகளின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்தி.  தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் நிஷாந்தி, குளச்சல் தும்பக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்று வந்த போது, அங்கு நில அளவையாளராகப் பணியாற்றி வரும் அபினாஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு நிஷாந்தியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

காதல் திருமணம்

நிஷாந்திக்கு வேறு ஒரு இளைஞருடன் வரும் ஜனவரி 12ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதில் விருப்பமில்லாத நிஷாந்தி, வீட்டை விட்டு வெளியேறி அபினாஷைத் திருமணம் செய்து கொண்டு, அந்தப் புகைப்படத்தைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது மகள் கடத்தப்பட்டதாகக் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காதல் திருமணம்

போலீசார் நடத்திய விசாரணையில் நிஷாந்தி தாமாகவே காதலனுடன் சென்றது உறுதியானது. இருவரும் காவல் நிலையத்தில் ஆஜரானபோது, அங்கு வந்த நிஷாந்தியின் தாய் எதிர்பாராத விதமாக மகளின் காலில் விழுந்து, "எங்களுடன் வந்துவிடு" என்று கதறி அழுதார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த பாசப் போராட்டத்தில், நிஷாந்தி தனது காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். இறுதியில், நிஷாந்தி மேஜர் என்பதால், போலீசார் அவரை அபினாஷுடன் அனுப்பி வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!