பட்டப்பகலில் பயங்கரம்.... நடுரோட்டில் கொத்தனார் வெட்டிக் கொலை… பெரும் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரைச் சேர்ந்த கொத்தனார் ராமசாமி (32) பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மனைவி உமா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தினமும் மதுரைக்கு வேலைக்குச் செல்வது வழக்கம். இன்று காலை டூவீலரில் சென்றபோது ஆவியூர் மெயின் ரோட்டில் இந்த கொடூரம் நடந்தது.

காலை 8.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் டூவீலரை வழிமறித்தது. தகராறில் ஈடுபட்ட அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து, கை, தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்த ஆவியூர் போலீசார் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சொத்து தகராறு காரணமாக சித்தப்பாவுடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதே காரணமா அல்லது வேறு பின்னணியா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
