மரண குழியில் மதிமுக? மன வருத்தத்தில் மாவட்ட செயலாளர்கள்! அண்ணா காலத்து பொதுக்குழு உறுப்பினரின் ஆதங்கம்!

 
வைகோ

இம்மாதம் 19ம் தேதி நமது தின மாலையில் “மறுமலர்ச்சி திமுக மல்யுத்தம்: மனக்குமுறலில் மலர் மன்னனின் மனசாட்சி !” என ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்... அப்பொழுது அதுகுறித்து பல்வேறு கட்சியினரும் தங்கள் மனக்குமுறலை நம்மிடம் பகிர்ந்து இருந்தார்கள் அதனைத்தான் கட்டுரையாக்கி இருந்தோம் நமக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. கிடைக்கும் செய்தியை மணம் மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நம் எண்ணம் ... 

இந்நிலையில் மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி ஆறு பக்க கடிதம் ஒன்றை எழுதி அதிரவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சரி யார் இந்த திருப்பூர் துரைசாமி அண்ணா திமுகவை தொடங்கிய பொழுது பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர்மதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை விஸ்வாசி. அண்ணா காலத்து பொதுக்குழு உறுப்பினரின் இப்பொழுது உயிரோடு இருப்பவர் அப்படிப்பட்டவர், மதிமுகவின் தற்பொழுதைய அவைத்தலைவர்தான் திருப்பூர் துரைசாமி மட்டுமே 

துரைசாமி கடிதம்

கிட்டத்தட்ட ஐந்து கடிதங்களை எழுதியதாகவும் அதற்கு எவ்வித பதிலையும் வைகோ அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருப்பதோடு மதிமுக ஆரம்பித்த பொழுது உங்களின் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளைக்கேட்டே லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உண்மையும் உறுதியும் இருக்கும் என நம்பி தங்களை ஆதரித்தனர்.

பெருவாரியான தலைவர்களும் தோழர்களும் தற்பொழுது திமுகவிற்கே சென்றுவிட்டனர். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போகிறது அந்த ஆறு பக்க கடிதம் இதில் உட்சபட்சமாக ”பொதுக்குழு உறுப்பினர் பெயர் பட்டியலை சங்கொலியில் வெளியிட கேட்டிருந்தேன் ஆனால் தாங்கள் இன்று வரை வெளியிடவில்லை, எனக்குறிப்பிட்டிருப்பதோடு இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தங்களது குடும்ப மறுமலர்ச்சிக்குத்தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

துரைசாமி

இது தான் அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி என்பதன் விளக்கமா என்பதை தங்களின் மனசாட்சியிடம் தாங்களே கேட்டுக்கொள்ளுங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக தங்களின் உணர்ச்சி மிக்க பேச்சை  நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என முடிகிறது கடிதம்.

ஆங்காங்கே மாவட்டச்செயலாளர்கள் மனக்குமுறலில் இருக்கும் வேளையில் நாம் முதலில் கட்டுரை வெளியிட்டோம் இப்பொழுது கட்சியின் அவைத்தலைவரே அதிரவைத்திருக்கிறார். மரங்கள் கிளை விடுவது மக்களை காப்பாற்ற கட்சிகள் கிளைவிடுவது மகன்களைக்காப்பாற்றவா என்பது குறித்து துரை.வைகோதான் விளக்கம் அளிக்க வேண்டும் எந்த காரணத்திற்காக இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தான் மறுமலர்ச்சி இழுந்து தவிக்கும் தங்கள் கட்சி தொண்டர்களின் நிலை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web