பிப்ரவரி 26ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடந்து வருகிறது. இதனையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை 26ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2 ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.
இதேபோல் சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2 ம் கால பூஜை இரவு 12 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், 4 ம் கால பூஜை 2 மணிக்கும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளன. இதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட உபகோவில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26ம் தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம். மீனாட்சி அம்மன் கோவிலில் அரசு உத்தரவின்படி வடக்கு ஆடி வீதிகளில் 26-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறுகிறது. சிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!