மெஸ்ஸி நிகழ்ச்சியில் கலவரம்... விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பயணமாக 13ம் தேதி இந்தியா வந்தார். கொல்கத்தா சென்ற அவர், தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் ரசிகர்கள் முண்டியடித்ததால் 22 நிமிடங்களிலேயே மெஸ்சி அங்கிருந்து புறப்பட்டார்.
இதனால் ரசிகர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. நீண்ட தூரம் பயணம் செய்து, அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் இருக்கைகளை உடைத்தனர். தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மேற்கு வங்காள விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதனை முதல்வரும் ஏற்றுக்கொண்டார். மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தானே பொறுப்பு என கூறப்படும் நிலையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக அரூப் பிஸ்வா தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
