இன்று முதல் ஜனவரி 16ம் தேதி வரை ஞாயிறு அட்ட​வணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

 
மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


இன்று ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்​கிழமை அட்ட​வணைப்படி இயக்​கப்​படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில், “பொங்கல் பண்டிகை (ஜன.14), மாட்டுப்​ பொங்கல் (ஜன.15), காணும் பொங்கல் (ஜன.16) ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

மெட்ரோ ரயில்

இந்த நாட்​களில் ஞாயிற்றுக்​கிழமை அட்ட​வணைப்படி காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை 10 நிமிட இடைவெளி​யிலும், நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை 7 நிமிட இடைவெளி​யிலும், இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளி​யிலும் மெட்ரோ ரயில்கள் இயக்​கப்​படும்.

மெட்ரோ ரயில்

ஜன.17-ம் தேதி (வெள்ளி) சனிக்​கிழமை அட்ட​வணைப்படி காலை 5 மணிமுதல் 8 மணிவரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை 7 நிமிட இடைவெளி​யிலும், இரவு 10 மணிமுதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளி​யிலும் ரயில்கள் இயக்​கப்​படும். பயணி​களின் தேவை அடிப்​படை​யில் கூடுதல் ரயில் சேவை இயக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

 

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!