தமிழிசையை காலாவதியாக்க 2026 தேர்தலில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் ... அமைச்சர் சேகர் பாபு ஆவேசம்!

 
தமிழிசை

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை பாரீசில் உள்ள  ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் சேகர்பாபு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வி, மேயர் பிரியா, கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு  இன்று தமிழிசை நடந்து கொண்டதை அவரின் தந்தை குமரி ஆனந்தன் பார்த்திருந்தால் மிகுந்த வருத்தப்பட்டிருப்பார். 

தமிழிசை

இவருக்கா தமிழிசை எனப் பெயர் வைத்தோம்? என்று மிகவும் வருத்தப்பட்டிருப்பார். இல்லங்கள் தோறும் சென்று கையெழுத்து வாங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால், ஊடக வெளிச்சத்திற்கு பாஜகவினரை வைத்துக் கொண்டு கையெழுத்து வாங்குகிறார்கள். பாஜகவை சார்ந்தவர்களை வைத்தே கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறார்கள். 

தமிழிசை சௌந்தரராஜன்

காலாவதி என்ற வார்த்தையை தமிழிசை பயன்படுத்தியுள்ளார். பாண்டிச்சேரியில் காலாவதியானவர் அவர்தான். தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் தமிழிசை. தமிழிசையையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் காலாவதியாக்க 2026 தேர்தலில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web