போர்க்கப்பல்களில் ஏவுகணை சோதனை... எல்லையில் போருக்கு தயாராகும் இந்தியா!

 
போர்க்கப்பல்கள்


காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி  பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் அக்னி பி ஏவுகணை சோதனை வெற்றி

குறிப்பாக பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.   இதேபோல நாட்டின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவ தளபதி உபேந்திரா திவேதி ஆய்வு செய்தார். பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய கடற்படை அரபிக்கடலில் எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதனை கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.  

ஜம்மு காஷ்மீர்

இது குறித்து  இந்திய கடற்படை தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் நீண்ட தூரம் சென்று எதிரிகளின் போர் கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. தேச நலனை பாதுகாப்பதற்கான பணியில் எந்நேரமும், எந்த தாக்குதலுக்கும் இந்திய கடற்படை தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web