மு.க.ஸ்டாலின் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி !

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்தின் துணிச்சலையும், தியாகங்களையும் போற்றும் வகையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியுள்ளார்.
அதன்படி சென்னை காவல் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் வரை பேரணி நடைபெறுகிறது. இப்பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உட்பட சுமார் 20,000 பேர் பங்கேற்றுள்ளனர். ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பை போற்றும் வகையிலும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த மாபெரும் பேரணி நடைபெறுகிறது.
பேரணி நடத்தும் முதல்வருக்கு ஆளுநர் நன்றி கூறியுள்ளார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடத்தும் முதல்வருக்கு நன்றி. பயங்கரவாதத்தை அழித்து தேசிய இறையாண்மையை பாதுகாக்கும் ஈடுபாட்டை உறுதி செய்கிறது. நமது ஆயுதப் படைகளுடன் தேசம் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் துணைநிற்கும் வகையில் பேரணி நடைபெறுகிறது” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!