13 மாவட்டங்களில் மிதமான மழை... குடை எடுத்திட்டு போங்க...!

 
மழை

தமிழகத்தில் இன்று  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம் , திருவண்ணாமலை, கடலூர்,மயிலாடுதுறை,நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில்   மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை காரணமாக தேங்கி நிற்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெளியான அறிவிப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் வட மற்றும் தென் மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கனமழையால் மக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலை உள்ளது.

இதற்கிடையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ம் தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web