அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு அலெர்ட்!! மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது . இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேநேரம் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!