அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழை!!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களை பொறுத்தவரை மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த மழை ஜூலை12ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.திருவள்ளூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, ஆகிய பகுதிகளிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்த மழை அடுத்த இரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!