சீக்கிரமா வீட்டுக்கு போங்க... 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை !

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணாமாக, தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, கடந்த 12 மணிநேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகள் என பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய ஆகிய 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!