இன்று முதல் டிசம்பர்20 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கட்கிழமை முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிடக் குறைவாகவே பதிவானது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் (டிச. 15, 16) வெப்பநிலை இயல்பை விடக் குறைவாகவே இருக்கும் எனவும், அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டிசம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
